பக்கங்கள்

September 3, 2010

சிந்தனைக்கு இன்று...

அப்துல்லாஹ் இப்னு மசூத்(ரலி) அவர்கள் கூறியதாவது,
"யாருடைய வீட்டில் திருக் குர்'ஆன் (வழக்கமாக) ஓதப்படவில்லையோ அவ்வீடு, கவனிப்பார் யாருமற்ற பாழடைந்த வீட்டைப் போலானதாகும்."
மேலும் அவர் கூறியது:
"காலியான வீடுகள் எவை என கேட்டால், எந்த வீட்டில் அல்லாஹ்வின் புத்தகம் இல்லையோ அந்த வீடு என்பேன்".
இப்னு அபி ஷய்பாஹ், அல் முஸன்னஃப் இதழ்.




.
read more "சிந்தனைக்கு இன்று..."

இன்றைய மேற்கோள்

அப்துல்லாஹ் பி. ஷகீக் அல் உகய்ல் (ரஹி) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களின் தோழர்கள்(ரலி), வேறெந்த செயலையும் 'குஃப்ரு'க்கு(இறைமறுப்பு) நிகராக கருதவில்லை, தொழுகையை விட்டுவிடுவதை தவிர".

அத்‍-திர்மிதி, அல்-சுனன் ஹதீத் 2622, அல் அல்பானி அவர்களின் சுனன் அத்-திர்மிதி எனும் புத்தகத்தில் ஸஹீஹ் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
read more "இன்றைய மேற்கோள்"

இன்றைய திருக்குர்'ஆன் வசனம்

  • நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
  • மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.
  • அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
  • சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.
(லைலத்துல் கத்ர் 97:1-5)




.
read more "இன்றைய திருக்குர்'ஆன் வசனம்"

இன்றைய ஹதீத்

“இறை நம்பிக்கையுடன் நன்மையைக் கருதி ரமலானில் நோன்பு நோற்பவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்கள்: புகாரி, முஸ்லிம்



.
read more "இன்றைய ஹதீத்"

இன்றைய து'ஆ


“எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” (ஸூரத்துல் ஹஷ்ர் :10)

  • தமிழில்: றப்பானாக் ஃபிர்லனா வலி இக்வானினா அல்லதீன சபகூனா பில் ஈமானி வலா தஜ் அல் ஃபீ குலூபினா கில்லன் லில்லதீன ஆமனூ றப்பனா இன்னக்க றஊஃபுர் ரஹீம்.
  • ஒலி வடிவில் கேட்க இங்கே கிளிக்கவும். (Real Player Format)




read more "இன்றைய து'ஆ"

September 2, 2010

25 வாக்குறுதிகள் - ஒன்பதாம் வாக்குறுதி

அவர்களின் (முஃமின்களின்) மேல் நேசத்தை ஏற்படுத்துவான்.

அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா தன் திருமறையில் கூறுகின்றான்,
"நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அர்ரஹ்மான் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான்."(திருமறை 19:96)

விளக்கவுரை:
திருக்குர்'ஆனிற்கு விளக்கவுரை எழுதும் ஆசிரியர்கள் கூறுவது என்னவெனில் நீங்கள் உங்களின் உள்ளத்தை அல்லாஹ்வை நோக்கி திருப்புகையில், அல்லாஹ் முஃமின்களின் இதயத்தை உங்களை நோக்கி திரும்ப வைக்கின்றான்.

இன்னுமொரு பொன்மொழி என்னவெனில், "நீவிர் மக்களை இன்பப்படுத்துவதன் மூலம் அல்லாஹ்வை கோபப்பட வைத்தால் அல்லாஹ் உங்கள் மீது கோபம் கொள்வதோடு மட்டுமல்லாமல் உலகமக்களையும் உங்கள் மேல் கோபம் கொள்ள வைப்பான். நீங்கள் அல்லாஹ்வின் மகிழ்ச்சியை பெறவேண்டி உலக மக்களின் வெறுப்பை சம்பாதித்தால் அல்லாஹ் உங்களிடம் அன்பு கொள்வதோடு உலக மக்களையும் உங்களிடம் நேசம் கொள்ளச் செய்வான்."

நம்முடைய தேவை இதுதான், முஃமின்களின் இதயம் நம்மிடம் நேசம் கொள்ளவேண்டும். எனவே அல்லாஹ்வை நேசியுங்கள். அல்லாஹ் அவனின் அடியான்கள் உங்களை நேசிக்க வைப்பான். இந்த நேசமானது அல்லாஹ்விடம் நேர்மையாய் உண்மையாய் இருக்கும் முஃமின்களிடமிருந்து மட்டுமே. முஸ்லிமல்லாதவர்களோ அல்லது நேர்மையற்ற வெறும் பேச்சுக்கென வாழும் முஸ்லிம்களிடமிருந்தோ அல்ல.

என்னுரை:
பாவமன்னிப்பு தேடுவதிலும், அல்லாஹ்வின் அருகாமையை தேடுவதிலும் மிக முக்கியமான ஒரு படி எதுவெனில் அவனை நேர்மையுடன், ஒழுங்குடன், மனத்தூய்மையுடன் துதிக்கும் முஃமின்களின் நேசத்தை பெறுவது. அவர்களின் கூட்டங்களில் பங்கு கொள்வதே நமக்கு பேராதாயமாகும். உலக மக்களுக்காக அல்லஹ்வையும் அவனின் மார்க்கத்தையும் சமரசம் செய்து கொள்ளும் பல பேரை இன்றைய உலகில் நாம் காணமுடியும். அவர்களின் முகத்தில் ஒளிரும் நூரைக் கொண்டே அல்லஹ்விடம் அவர்களின் மதிப்பை தெரிந்துகொள்ள முடியும். எனவே அல்லாஹ்வின் வாக்குறுதிகள் உங்கள் வாழ்விலும் ஈடேற வேண்டுமென்றால், அவனின் அருகாமையும் பாவ்மன்னிப்பும், சுவனமும் கிட்ட வேண்டுமென்றால், நல்மக்களின் தோழமையை பெறுங்கள். அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் நாடுங்கள். உலக ஆதாயத்திற்காக மார்க்கத்தை சமரசம் செய்து கொள்ளாதீர்கள். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நம்மை அவன் விரும்புவோரின் பட்டியலிலும், அவனின் உண்மையான அடியான்கள் விரும்புவோரின் பட்டியலிலும் நம்மை வைப்பானாக. ஆமீன்.



.
read more "25 வாக்குறுதிகள் - ஒன்பதாம் வாக்குறுதி"

September 1, 2010

25 வாக்குறுதிகள் - எட்டாம் வாக்குறுதி

அல்லாஹ் தீமையை முற்றிலும் அழிப்பான்.

அல்லாஹு சுப்ஹானஹுவத ஆலா தன் திருமறையில் கூறுகின்றான்,
"ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுடைய தீங்குகளை அவர்களை விட்டும் நிச்சயமாக நீக்கி விடுவோம்; இன்னும், அவர்கள் செய்த நன்மைகளுக்கு அவற்றைவிட மிக்க அழகான கூலியை, நிச்சயமாக நாம் அவர்களுக்கு கொடுப்போம்." (திருமறை 29:7)
விளக்கவுரை:
அல் ஜன்னாஹ் (அ) சுவனம் என்பது தூய்மையான இடமாகும். எனவே தூய்மையான மக்களை மட்டுமே அதில் அனுமதிக்கப்படும். தூய்மையற்றவர்கள் இதி போக இயலாது.

ஆதமின் மக்கள் அனைவரும் பாவம் செய்பவர்களே. இதில் பாவத்திலிருந்து விலக்கப்பட்டவர்கள் என எவரும் இலர். நாமெல்லோருமே தீங்கிழைத்து தீங்கிழைத்து நம் ஆன்மாவில் அழுக்கேற்றியவர்கள்தான், நம்மில் ஒவ்வொருவருமே எனில் நாம் எவ்வாறு இந்த பாவங்களை துடைத்துவிட்டு தூய்மையாக முடியும்?

கீழ்க்கண்ட வழிகளின் மூலமாக நாம் தூய்மை அடையலாம்.
  • தவ்பா (பாவமன்னிப்பு தேடுதல்)
  • இஸ்திக்ஃபார் (அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பை எதிர்நோக்குதல்)
  • நோய்கள் கூட பாவங்களிலிருந்து நம்மை தூய்மைபடுத்தும், அந்த நேரத்தில் பொறுமையை கைக்கொண்டால்.
  • அதே போல் இன்னல்களும் துயரங்களும் இன்னும் அனைத்து ஃபித்னாக்களையும் பொறுமையுடனும் இறைதிருப்தியுடனும் சந்திக்கும்போது நம் பாவங்கள் நம்மை விட்டு விலகுகின்றன.
எவ்வாறு நோக்கினும் நம் பாவங்களை கழுவிட ஓர் செயல்முறை அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட ஓர் வழிமுறை வேண்டும். அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான அடியான்கள் இருக்கின்றனர். அல்லாஹ் அவனின் ரஹமத்தை அவர்கள் மீது காட்ட விழையும்போது இவ்வுலகில் (அந்த அடியான்களின்) பாவத்தை மறைத்துவிடுகின்றான், அதே போல் மறுமையிலும் அப்பாவங்களை மறைத்துவிடுகின்றான். ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் கூறினார்கள்," ஒரு மனிதனை தீர்ப்பு அளிக்கப்படும் அந்நாளில் அழைத்து வரப்படும். அவன் முழங்கால்கள் பதற்றத்தில் நிலைகுலைந்து ஆடிக் கொண்டிருக்கும், அந்நேரத்தில் அவனின் ஏடு அவன் முன் கொண்டுவரப்படும். அவனுக்கு தான் செய்த குற்றங்கள் தெரியும், ஏட்டினை படித்துக் கொண்டே போவான், அனைத்து பாவங்களும் அதில் பதியப் பெற்றிருப்பதை காண்பான், சில பெரிய பாவங்களைத்தவிர. எனவே அவன் அல்லாஹ்வை நோக்கி, யா அல்லாஹ் என்னுடைய சில பாவங்களை நான் இந்த ஏட்டில் காண‌வில்லையே என்பான். அல்லாஹ் சுப்ஹானஹுவதஆலா கூறுவான், என் அடியானே, நான் உலகிலும் உன்னுடைய அந்த பாவங்களை மன்னித்து வைத்தேன், இன்று மறுமையிலும் அதை உனக்காக மறைத்துவிட்டேன் என்பான்.

ஒரு அடியான் தன் மேல் 'ஸித்ர்' (பாவங்களை மறைக்கும் திரை) இட்டு தன்னை பாதுகாக்கும் வரை அல்லாஹ்வும் அவனின் ஸித்ரை பாதுகாப்பான். எனவே ஒரு பாவம் அல்லது தீங்கு செய்துவிட்டீர்களென்றால், அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள், இஸ்தக்ஃபார் செய்யுங்கள், அந்த பாவத்தை விட்டுவிட்டு முன்னேறிச் செல்லுங்கள். அல்லாஹ்விடம் நேர்மையுடன் இஸ்தக்ஃபார் செய்திருந்தாலும், பாவத்தை விட்டுவிடும் நோக்கத்துடன் தவ்பா செய்திருந்தாலும் அல்லாஹ் அனைத்து பாவங்களையும் மன்னிக்க தயாராக இருப்பான்.

என்னுரை:
நம்மில் பல பேர் செய்கின்ற பெரிய தப்பு என்னவெனில், செய்த பாவத்தை விளையாட்டாகவோ அல்லது அதற்கு பரிகாரம் தேடும் சாக்கிலோ அல்லது என்ன செய்வதென்றே தெரியாமலோ எல்லோரிடமும் சொல்லிவிடும் வேலையை செய்கிறோம். பாவத்திற்கு இட வேண்டிய திரையை நாமே அழித்து விடுகின்றோம். இதுதான் நாம் செய்யும் மிகப் பெரிய தவறு. பாவத்தை விட மனம் கொள்வதும், செய்த பாவத்தினை அல்லாஹ்விடம் மட்டுமே சொல்லி பாவமன்னிப்பு தேடுவதும், அதனை விட்டு விலகுவதுமே நம்மை தூய்மடைய செய்யும். எனவே அல்லாஹ் நம்மை தூய்மையாக்க முயற்சிக்கையில் நாமும் தூய்மையடைய மனதார விரும்புவோம். இன்ஷா அல்லாஹ் இந்த ரமதானில் அல்லாஹ் நம்மை தூய்மைபடுத்த நாம் எடுக்கும் முயற்சிகளில் கை கொடுப்பானாக. ஆமீன்.




.
read more "25 வாக்குறுதிகள் - எட்டாம் வாக்குறுதி"