(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக. (அல் குர்ஆன் 2:186)
ஸியாம்-- 'நோன்பு' என்பது அரபி பாஷையின் இலக்கணத்தின்படி ஏதும் ஒரு பொருளிலிருந்து விலகியிருப்பதாகும். செவிக்கும் பார்வைக்கும் நோன்பானது (நோன்பின் காலத்தில் நாம் எவ்வாறு உண்பதிலிருந்தும் பருகுவதிலிருந்தும் விலகி இருக்கிறோமோ அவ்வாறே) அல்லாஹ்விற்கு பிடிக்காத செயல்களை செய்வதிலுமிருந்து அவற்றை (கண், காது) விலக்கி வைப்பதாகும்: சுலைமான் மூசா (ரஹி)
Showing posts with label பிரார்த்தனை. Show all posts
Showing posts with label பிரார்த்தனை. Show all posts
August 31, 2010
இன்றைய திருக்குர்'ஆன் வசனம்
இன்றைய ஹதீத்
நுஃமான் இப்னு பஷீர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன் ‘பிரார்த்தனை (து'ஆ) அது தான் வணக்கமாகும்‘ எனக் கூறிவிட்டு பின் வரும் வசனத்தை ஓதினார்கள்: ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள், நான் உங்(கள் பிரார்த்தனை)(து'ஆ)களுக்குப் பதிலளிக்கிறேன், எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.” (ஆதாரம்: திர்மிதி).
Subscribe to:
Posts (Atom)