பக்கங்கள்

Showing posts with label இறையச்சம். Show all posts
Showing posts with label இறையச்சம். Show all posts

July 26, 2011

இனிய ரமலானே வருக வருக... வருக.. :)))))))

ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 
(அல்குர்ஆன் 2:183) 



அன்புள்ள சகோதர சகோதரிகளே... 

இனிய ரமலான் மாதம் அடி மேல் அடி வைத்து நெருங்கிக் கொண்டே இருக்கிறது.... மனமுவந்த விருந்தினரை வரவேற்கும் முகமாய், பாசமும், அன்பும், விருந்தோம்பலும், 365 நாட்கள் காத்திருந்த நேரத்தின் வேதனையை மறைக்கும் முகமாய்... அப்பப்பா... எண்ணிலடங்கா எண்னங்களுடன் வாசலை நோக்கியவாறே...உங்களுடன் நானும். 

இந்த வருட ரமலானில் என்னென்ன செய்து விருந்தினரை மகிழ்விக்கலாம் என முடிவெடுத்து விட்டீர்களா??? என் முடிவுகள் இன்ஷா அல்லாஹ் நாளை... நீங்களும் தயார் செய்து கொண்டு வாருங்கள்... நல்லமல்களை ஒரு சேர முயன்று வெல்வோம்... தீயவற்றை தடுப்பதில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வோம்... இன்ஷா அல்லாஹ்... 

அல்லாஹும்ம பலக்ன ரமதான்..... ஆமீன்... ஆமீன்... அல்லாஹும்ம ஆமீன்... 

:))
read more "இனிய ரமலானே வருக வருக... வருக.. :)))))))"

September 3, 2010

இன்றைய திருக்குர்'ஆன் வசனம்

  • நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
  • மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.
  • அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
  • சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.
(லைலத்துல் கத்ர் 97:1-5)




.
read more "இன்றைய திருக்குர்'ஆன் வசனம்"

இன்றைய ஹதீத்

“இறை நம்பிக்கையுடன் நன்மையைக் கருதி ரமலானில் நோன்பு நோற்பவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்கள்: புகாரி, முஸ்லிம்



.
read more "இன்றைய ஹதீத்"

August 30, 2010

இன்றைய மேற்கோள்

இதயத்தின் தூய்மை

இதயம் நோய்படக்கூடும், அதனால் உடலும் நோயுறும், மேலும் அதன் நிவாரணம் தவ்பாவும்(பாவ மன்னிப்பு கோருதல்), பாதுகாப்பும்(வரம்பு மீறுதலிலிருந்து) ஆகும். ஒரு கண்ணாடி துருபிடிப்பதைப் போலவே இதயமும் துர் பிடிக்கின்றது, மீண்டும் அதை தெளிவாக்க அல்லாஹ்வின் நினைவு உதவிடும். உடல் நிர்வாணமடைவதைப் போலவே மனதும் நிர்வாணமடைகின்றது, அதனை அழகாக்க தக்வா(அல்லாஹ்வை அஞ்சுதல்) உதவிடும். வயிற்றுக்கு பசிப்பதைப் போலவே இதயத்திற்கும் வசியும் தாகமும் ஏற்படும், அதன் உணவும் நீரும் இல்மும், அன்பும்(அல்லாஹ்விற்காக), அல்லாஹ்வை சார்ந்திருப்பதும், தவற்றிற்கு வருந்துவதும் மற்றும் அடி பணிவதுமாகும்(அல்லஹ்வின் சட்டங்களுக்கு)

இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஜிய்யாவின் 'அல் ஃபவாயித்' எனும் புத்தகத்திலிருந்து.







.
read more "இன்றைய மேற்கோள்"

இன்றைய து'ஆ

ஆயிஷா(ரலி) அவர்கள் இந்த து'ஆவை நபி(ஸல்) அவர்களிடத்திலிருந்து அறிவிக்கிறார்கள்,


"யா அல்லாஹ் என்னுடைய நஃப்ஸிற்கு பக்தியையும் தூய்மையையும் கொடு. நீதான் அதனை தூய்மையாக்க வல்லவன், நீதான் அதன் பாதுவாலனும், எஜமானும் ஆவாய்."


.
read more "இன்றைய து'ஆ"

August 29, 2010

இன்றைய திருக்குர்'ஆன் வசனம்

அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்.(திருமறை 9:18)



.
read more "இன்றைய திருக்குர்'ஆன் வசனம்"

August 26, 2010

சிந்தனைக்கு இன்று

அப்துல்லாஹ் இப்னு மசூத்(ரலி) அவர்கள் கூறினார்கள்,"பாவங்களிலேயே மிக மட்டமான பாவம் எதுவெனில், ஒரு மனிதன் தன் சகோதரரிடம் "அல்லாஹ்வை பயந்து நடந்து கொள்" என்று சொல்லும்போது அந்த சகோதரர் அவருக்கு "நீர் உம்மைப் பற்றி முதலில் வருத்தப்படும்" என பதில் கூறுவது".

அபூ பக்ர் அத் தய்னூரி, அல் முஜாலஸா வ ஜவாஹிர் இதழ், கட்டுரை எண் 2619



.
read more "சிந்தனைக்கு இன்று"