பக்கங்கள்

Showing posts with label ஸஹீஹ் முஸ்லிம். Show all posts
Showing posts with label ஸஹீஹ் முஸ்லிம். Show all posts

September 3, 2010

இன்றைய ஹதீத்

“இறை நம்பிக்கையுடன் நன்மையைக் கருதி ரமலானில் நோன்பு நோற்பவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்கள்: புகாரி, முஸ்லிம்



.
read more "இன்றைய ஹதீத்"

September 1, 2010

இன்றைய ஹதீத்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஜமாஅத்தாகத் தொழுவது தனித்துத் தொழுவதையும் விட இருபத்தி ஏழு மடங்கு சிறப்பிற்குரியதாகும். நான் தொழுகைக்கு ஏவி, தொழுகையை முன்னின்று நடத்துவதற்காக யாரையேனும் நியமித்து விட்டு ஜமாஅத்துத் தொழுகைக்கு வராதோரின் இல்லங்களுக்கு நானே சென்று அவர்கள் அங்கிருக்கும் நிலையில் அவ்வில்லங்களுக்குத் தீ வைக்க விழைகின்றேன். 

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
read more "இன்றைய ஹதீத்"

இன்றைய து'ஆ

நபி (ஸல்) அவர்களின் துணைவி உம்முல் முஃமினீன் ஜுவைரியா(ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி(ஸல்) அவர்கள் சுப்ஹீத் தொழுகைக்குப்பின் அதிகாலையில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நான் எனது தொழுமிடத்தில் அமர்ந்திருந்தேன். பிறகு அவர்கள் முற்பகல் தொழுகை(ளுஹா) தொழுதுவிட்டு வந்தார்கள். அப்போதும் நான் (அதே) இடத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது என்னிடம், "நான் உன்னிடமிருந்து சென்றது முதல் இதே நிலையில்தான் நீ இருந்து கொண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்கள். நான், " ஆம்" என்றேன்.

நபி (ஸல்) அவ்ர்கள், "நான் உன்னிடமிருந்து சென்றதற்குப் பிறகு நான்கு (துதி) சொற்களை மூன்று முறை சொன்னேன். அவற்றை இன்றைக்கெல்லாம் நீ சொன்னவற்றுடன் மதிப்பிட்டால், நீ சொன்னவற்றை அவை மிகைத்துவிடும். (அவை)


"சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, வ ரிதா நஃப்சிஹி, வ ஜீனத்த அர்ஷிஹி, வ மிதாத கலிமாதிஹி"
ஆகியவையாகும் என்றார்கள்.
பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவிற்கும், அவனது அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவிற்கும் அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்து அவனை தூயவன் என துதிக்கிறேன்.
[ சஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் 48 : ஹதீஸ் எண் 5272: அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) ]

ஒலி வடிவில் கேட்க இங்கே கிளிக்கவும். (Real Player Format)




.
read more "இன்றைய து'ஆ"

August 30, 2010

இன்றைய ஹதீத்

"ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ, ஒரு ரமளானிலிருந்து மறு ரமளான் ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும் - பெரும் பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் (அத்தியாயம்: 2, பாடம்: 2.05, எண் 344)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
read more "இன்றைய ஹதீத்"

August 26, 2010

இன்றைய ஹதீத்

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (முஸ்லிம்களில் சிறந்தவர்)" என்று பதிலளித்தார்கள்.

  • ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் | அத்தியாயம்: 1 | பாடம்: 1.14 | ஹதீஸ் எண்: 57
  • அறிவிப்பாளர் : அம்ரு பின் அல்-ஆஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) ஆகியோரிடம் கேட்டு, அபுல் கைர் (ரஹ்).


.
read more "இன்றைய ஹதீத்"