“இறை நம்பிக்கையுடன் நன்மையைக் கருதி ரமலானில் நோன்பு நோற்பவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்கள்: புகாரி, முஸ்லிம்
நூல்கள்: புகாரி, முஸ்லிம்
.
ஸியாம்-- 'நோன்பு' என்பது அரபி பாஷையின் இலக்கணத்தின்படி ஏதும் ஒரு பொருளிலிருந்து விலகியிருப்பதாகும். செவிக்கும் பார்வைக்கும் நோன்பானது (நோன்பின் காலத்தில் நாம் எவ்வாறு உண்பதிலிருந்தும் பருகுவதிலிருந்தும் விலகி இருக்கிறோமோ அவ்வாறே) அல்லாஹ்விற்கு பிடிக்காத செயல்களை செய்வதிலுமிருந்து அவற்றை (கண், காது) விலக்கி வைப்பதாகும்: சுலைமான் மூசா (ரஹி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஜமாஅத்தாகத் தொழுவது தனித்துத் தொழுவதையும் விட இருபத்தி ஏழு மடங்கு சிறப்பிற்குரியதாகும். நான் தொழுகைக்கு ஏவி, தொழுகையை முன்னின்று நடத்துவதற்காக யாரையேனும் நியமித்து விட்டு ஜமாஅத்துத் தொழுகைக்கு வராதோரின் இல்லங்களுக்கு நானே சென்று அவர்கள் அங்கிருக்கும் நிலையில் அவ்வில்லங்களுக்குத் தீ வைக்க விழைகின்றேன்.
"சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, வ ரிதா நஃப்சிஹி, வ ஜீனத்த அர்ஷிஹி, வ மிதாத கலிமாதிஹி"ஆகியவையாகும் என்றார்கள்.
பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவிற்கும், அவனது அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவிற்கும் அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்து அவனை தூயவன் என துதிக்கிறேன்.[ சஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் 48 : ஹதீஸ் எண் 5272: அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) ]
"ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ, ஒரு ரமளானிலிருந்து மறு ரமளான் ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும் - பெரும் பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (முஸ்லிம்களில் சிறந்தவர்)" என்று பதிலளித்தார்கள்.