“இறை நம்பிக்கையுடன் நன்மையைக் கருதி ரமலானில் நோன்பு நோற்பவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்கள்: புகாரி, முஸ்லிம்
நூல்கள்: புகாரி, முஸ்லிம்
.
ஸியாம்-- 'நோன்பு' என்பது அரபி பாஷையின் இலக்கணத்தின்படி ஏதும் ஒரு பொருளிலிருந்து விலகியிருப்பதாகும். செவிக்கும் பார்வைக்கும் நோன்பானது (நோன்பின் காலத்தில் நாம் எவ்வாறு உண்பதிலிருந்தும் பருகுவதிலிருந்தும் விலகி இருக்கிறோமோ அவ்வாறே) அல்லாஹ்விற்கு பிடிக்காத செயல்களை செய்வதிலுமிருந்து அவற்றை (கண், காது) விலக்கி வைப்பதாகும்: சுலைமான் மூசா (ரஹி)
‘நோன்பாளி தேவையற்ற பேச்சுக்கள், வீண் விளையாட்டுக்கள், கேளிக்கைகள் என்பவற்றைத் தவிர்ந்திருக்க வேண்டும். எத்தனையோ நோன்பாளிகளுக்கு அவர்களது நோன்பால் பசித்திருந்ததைத் தவிர எந்தப் பயனும் இருக்காது. எத்தனையோ தொழுகையாளிகளுக்கு அவர்களின் தொழுகை மூலம் கண் விழித்திருந்ததைத் தவிர வேறு பலன் கிடைக்காது’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)