பக்கங்கள்

Showing posts with label அறிவுரை. Show all posts
Showing posts with label அறிவுரை. Show all posts

August 31, 2010

இன்றைய மேற்கோள்

அல்ஹஸன் அல் பஸ்ரி (ரஹி) அவர்கள் கூறினார்கள்,

"ஒரு மனிதன் ஞானத்தை நாடினானென்றால் விரைவிலேயே அந்த ஞானமானது அவனின் பணிவிலும், பார்வையிலும், அவனுடைய நாவின் மூலமாகவும், அவன் கரங்கள் மூலமாகவும், அவனின் தொழுகையிலும், அவனின் பேச்சிலும் மற்றும் உலகத்தின் மீதான குறைவான நாட்டத்திலும் எதிரொலிக்கும். மேலும் ஒரு மனிதன் இல்மில் (மார்க்க ஞானம்) சிறிதேனும் கற்றானென்றாலும் அதை அவன் செயல்களில் எதிரொலிப்பதே, இந்த உலகும் அதனுள் அடங்கிய எல்லாவற்றையும் விட மதிப்பானதாகும் . அத்தனை செல்வம் அவன் கொண்டிருந்தாலும் மறுமைக்கென அவன் அதனை பரிமாற்றம் செய்து கொள்வான்"
இப்னு அல் முபாரக், அத் துஹ்து வ அல் ரகா'இக் பாகம் 1 பக்கம் 156



.
read more "இன்றைய மேற்கோள்"

August 27, 2010

இன்றைய மேற்கோள்

உத்மான் இப்னு அஃப்ஃபான் (ரலி) அவர்கள் ஓர் பயான் / குத்பாவில் கூறியது:

"ஆதமின் மக்களே! நினைவில் வையுங்கள், நீங்கள் இந்த உலகில் வந்ததிலிருந்து உங்களுக்கென பணிக்கப்பட்ட, மரண தருவாயில் உங்கள் ரூஹை எடுக்கும் மலக்குமார் இன்னும் உங்களை தாண்டி வேறு ஆன்மாவை நாடி செல்லவில்லை. மற்றுமோர் ஆன்மாவின் ரூஹை எடுக்கப் போகும்போது அனிச்சையாய் உங்களை நோக்கி வரக்கூடும். அந்த மலக்குமாருக்காக காத்திருங்கள், மற்றும் தயாராக‌ இருங்கள் (உங்களின் அமல்களை சரி செய்து கொண்டு) . மேலும் அந்த மலக்குமாரைப் பற்றி நிமிடமேனும் மறந்துவிடாதீர்கள், ஏனெனில் அவர் உங்களை எக்காலத்திலும் மறக்கப் போவதில்லை. மேலும் ஆதமின் மக்களே...இதையும் நினைவில் வையுங்கள், சுயசிந்தனை இல்லாமல், மறுமைக்கான தயாரிப்பும் இல்லாமல் நீங்கள் இருப்பின் வேறு யாரும் உங்களுக்கென மறுமைக்கு தயாராக இயலாது. நீங்கள் அல்லாஹ் சுப்ஹானஹு வத ஆலாவை சந்தித்தே தீர வேண்டும், வேறு யாரும் உங்களுக்கென அதற்கு தயாராக மாட்டார். சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக."

அபூ பக்ர் அத் தய்னூரி, அல் முஜாஸிலாஹ் வல் ஜவாஹிர் அல் இல்ம் இதழ் 2: பக்கம் 73, 74.



.
read more "இன்றைய மேற்கோள்"