பக்கங்கள்

August 29, 2010

இஸ்லாத்தின் உண்மையான‌ உத்வேகமூட்டும் வாழ்க்கைகள்

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹமான் நிர் றஹீம்

அன்பான சகோதர சகோதரிகளே..,

அல்ஹம்துலில்லாஹ். இந்த வலைப்பூவை நான் தாமத்தித்தே ஆரம்பித்தேன் எனினும், என்னையுமறியாமல், இந்த வலைப்பூவை மேம்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டினேன். அல்லாஹு சுப்ஹானவத ஆலாவின் உதவியும் கிட்டியதால், இதோ இன்னுமொரு தொகுப்பு நமக்கு படிக்க கிடைத்துள்ளது. இந்த தொகுப்பானது, நம் இஸ்லாத்திலும், நடைமுறையிலும், வாழ்க்கைநெறிகளிலும் நமக்கு முன்னோர்களான, நபிகளாரின்(ஸல்) சீரிய தோழர்களின் வாழ்க்கைப் பதிவே இத் தொடராகும். இத் தொடரை எழுதி, அதை இலவசமாய் பிரசுரித்து மற்ற வலைதளங்களிலும் பிரசுரிக்க அனுமதித்த 'சத்தியமார்க்கம்' தளத்திற்கு என் நன்றி. அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா, இரு உலகின் நன்மைகளையும் 'சத்தியமார்க்கம்' தளத்தின் நிர்வாகிகளுக்கும், ஆதரிப்போருக்கும், உதவுபவர்க‌ளுக்கும் தந்தருள்வானாக. ஆமீன்.

இந்த வாழ்க்கை வரலாறுகள், நம் வாழ்வை வளப்படுத்தக்கூடிய காரணிகள். நம் ஈமானை செம்மை படுத்தக்கூடிய ஆபரணங்கள். நிச்சயமாக, இவர்களின் வாழ்வைப்பற்றி அறிந்து கொள்ளாதவரை, நம்மால் நம் ஈமானை வளர்க்க இயலாது. ஆகவே, நேரம் கிட்டும்போதெல்லாம் மறக்காமல் இவர்களைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இவர்களைப் போலவே வாழ து'ஆ செய்யுங்கள். முடிந்தவரை முயலுங்கள். அல்லாஹ் நம் ஈமானை பரிசுத்தப்படுத்திட உதவிடுவானாக. ஆமீன். இனி இந்த தொடரைப் படிப்போம்...வாருங்கள்

No comments:

Post a Comment