பக்கங்கள்

August 24, 2010

சிந்தனைக்கு இன்று...

மகிழ்ச்சியும், கஷ்டமும், அடி பணிவதும் மற்றும் பாவமும்

வுஹைப் பி அல் வார்த்(ரஹி) கூறியதாவது,"திண்ண‌மாக எப்பொழுது அல்லாஹ் ஓர் அடிமையை மேன்மைபடுத்த விரும்புகின்றானோ(அவனின் நல் அமல்களுக்காக), பின் அல்லாஹ் அவனின் வாழ்வாதாரத்தில் குறை ஏற்படுத்துகின்றான், அவனின் உடலில் நோயை ஏற்படுத்துகின்றான் மேலும் பயம் கலந்த ஓர் வாழ்வை அவனுக்கு தருகின்றான்(இவையனைத்தும் அவனின் பாவங்களை அழிக்கின்றன). மரணம் வரை வாழ்வு இப்படியே இருக்கின்றது, பின்பும் ஏதேனும் பாவங்கள் மிச்சமிருப்பின் அவற்றிற்காக வேண்டி மரண நிமிடங்களை கடுமைப்படுத்துகின்றான், இதனால் அல்லாஹ்வின் முன் செல்லும் வேளையில் அந்த அடியானிடம் பாவங்கள் எதுவும் மிஞ்சுவதில்லை.

அதே போல், எந்த அடியான் அல்லாஹ்வின் முன்னால் ஒரு பொருட்டும் இல்லையோ(அவனின் அடிபணியாத குணம் மற்றும் தீய அமல்களினால்) அவனுக்கு அல்லாஹ் நல்ல உடல்நிலையை தருகின்றான், அவனுடைய வாழ்வாதாரத்தை பெருக்குகின்றான், நம்பிக்கையான் ஒரு வாழ்வை அவனுக்கு தருகின்றான்(இதன் மூலம் அவனின் எல்லா நல் அமல்களுக்கும் இந்த வாழ்விலேயே கூலி கிடைத்து விடுகின்றது) மரணம் வரை வாழ்வு இப்படியே இருக்கின்றது. பின்பும் ஏதேனும் நல் அமல்கள் மிஞ்சினால் அல்லாஹ் அவனுடைய மரண நிமிடங்களை எளிதாக்குகின்றான் இதனால் அல்லாஹ் முன் செல்லும் வேளையில் அந்த அடியானிடம் நல் அமல்கள் எதுவும் மிஞ்சுவதில்லை"

'அபூ பக்ர் அத் தய்னூரி, அல் முஜாசலாஹ் வ ஜவாஹிர் அல் இல்ம்' இதழ் கட்டுரை எண்:2865.



.

No comments:

Post a Comment