பக்கங்கள்

July 28, 2011

ரமதானில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள்


அஸ் ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர சகோதரிகளே,

இன்னும் இரண்டு மூன்று நாட்களில் ரமதான் மாதம் நம் வீட்டில் காலடி எடுத்து வைத்து விடும் அல்ஹம்துலில்லாஹ்... ரமதான் முபாரக்... ரமதான் கரீம் முபாரக்...!

சரி, எப்பொழுதும் போல இந்த ரமதானையும், வயிறு காயவிட்டு, தொண்டை வறண்டு தூங்கித்தூங்கி எழுந்து இஃப்தாரில் ஒரு மாதத்துக்கான உணவை உண்டு மகிழ விருப்பமா அல்லது, எல்லாம் வல்ல நாயனை அதிகமதிகம் நினைவு

கூர்ந்து, ஸஹரிலும் இஃப்தாரிலும் தேவைக்கு ஏற்ப அளவாக சாப்பிட்டு, உடல் நலத்தையும், அதைவிட ஈமானின் நலத்தையும் பேணி, அதிக கூலியை பெற்றுவிட எண்ணுபவர்கள்.... வருக வருக.

அதிகமான நேரம் இல்லாததால் சுருக்கமாக நாம் இந்த ரமதானில் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பார்ப்போம். இந்த ரமதானில் நாம் அனைவரும் சேர்ந்து ஒருவருக்கொருவர் போட்டி போட்டு இறைவனின் கூலிகளை பெறுவோமா??

தஹஜ்ஜுத், தராவீஹ், கடமையான தொழுகை, தினம் ஓதும் குர்’ஆன் தவிர வேறு என்ன செய்தால் இன்னும் நன்மை என காண்போம். (இதை விட நல்ல யோசனைகளும் வரவேற்கப்படுகிறது.) என் சார்பாக நான் இந்த ரமதானில்

செய்ய வேண்டியதை முடிவெடுத்துள்ளேன் இன்ஷா அல்லாஹ், அதனுடன், சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து குழுவாக, சில விஷயங்களை செய்யலாம் என்றெண்ணியுள்ளேன். இன்ஷா அல்லாஹ், இனி விஷயத்திற்கு வருவோம்.

இதில் மூன்று திட்டம் உள்ளது, எந்த திட்டத்திற்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அந்த திட்டத்தை செயல்படுத்துவோம், இன்ஷா அல்லாஹ்.

முதல் திட்டம்: திருக் குர்’ஆனின் 30 வது அத்தியாயத்தை ரமதான் மாத முடிவுக்குள் மனனம் செய்தல்.
இரண்டாவது திட்டம்: சூறா முல்க்  அல்லது சூறா வாகி’ஆ மனனம் செய்தல் (கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ஒரு ஆயத்து.)
மூன்றாவது திட்டம்: கடைசி பாகமும் தெரியும், மனனமாக தெரிந்திருக்க வேண்டிய / அதிகம் நினைவு கூர வேண்டிய (முல்க், வாகிஆ...) சூறாக்களும் தெரியும் என்பவர்களுக்கு இது.சூறா கஹ்ஃப் மனனம் செய்யும் திட்டம்.

விதிமுறைகள்.
1. திட்டத்தில் இணைய, கூலிகளை அள்ளிட விருப்பமுள்ளவர்கள் எனக்கு மெயிலில் தெரிவிக்கவும். சீராக கவனிக்க இது உதவும்.
2. திருக் குர்’ஆனின் கடைசி பாகத்தில் இன்னும் இரண்டு மூன்றே மனனம் செய்ய வேண்டியுள்ளது என்பவர்கள் முதல் திட்டத்தில் சேர இயலாது.
3. திருக் குர்’ஆனில் 10, 15 சூராக்கள் ஏற்கனவே தெரியும் என்பவர்களும் முதல் திட்டத்தில் சேரலாம். குறைந்தது பெரிய 8 சூறாவாவது இனிதான் மனனம் செய்ய வேண்டும் என்பவர்களும் முதல் திட்டத்தில் சேரலாம்.
4. கடைசி பாகமெல்லாம் முடியாது, எளிதாகவே தொடங்கலாமே என்பவர்கள் இரண்டாம் திட்டத்தில் சேரலாம். ஒரு நாளைக்கு ஒரு ஆயத்தை மனனம் செய்தாலும் போதும். மனனம் செய்த ஆயத்தை டெஸ்ட் செய்யவே 2 ரக்-அத் நஃபில் தொழுது பார்க்கலாம். போனஸ் கூலி..!! :)
5. சூறா கஹ்ஃப் முடியாது, கஷ்டம் என்பவர்கள், விருப்பமிருந்தால் வேறேதேனும் சூறாவை இங்கே குறிப்பிடுங்களேன். சூறா யாசீனும் சேர்த்தி, ஆனால் அதற்கு ஆதார ஹதீத் உள்ளதா என்கிற விவாதத்திற்கு இங்கே இடமில்லை. எந்த சூறா வேண்டுமானாலும் செய்யலாம்.
6. கடைசி பாகம், இன்னும் மற்ற சூறாக்களும் தெரியும் என்பவர்கள் தனியாக மெயிலில் தெரிவியுங்கள். இரண்டு சகோதர / சகோதரிகள் அப்படி குறிப்பிட்டாலும், இன்ஷா அல்லாஹ் அவர்களின் நடுவில் ஓர் அழகிய திட்டத்தை அமைத்துக் கொடுப்போம்.
7. அதிக நாளில்லை ஆதலால், வெள்ளி மாலை அமெரிக்க EST படி 6:00 மணி / அதற்கு முன் விவரங்கள் தரப்பட் வேண்டும்.

குழந்தைகள் திட்டம்: 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் ஒரு திட்டம் உண்டு, தாய் தந்தை, தாத்தா பாட்டி என சொல்லி தரும் அனைவருமே கூலிகளை அள்ளிடும் திட்டம் இது.வரை முறை இல்லாமல் மனனம் செய்யலாம். ஆனால்

விதிகளின் படி முதல் இடத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு இன்ஷா அல்லாஹ் பரிசு உண்டு. பங்கு பெறும் குழந்தைகள் அனைவருக்கும் ‘உம்மத்’ குழுவின் சார்பாக பரிசுப் பத்திரம் உண்டு. :)

குழந்தைகளின் திட்டம் விதி முறைகள்:
1. 2 - 5 வயது குழந்தைகள் எவ்வளவு சூறா தெரிந்திருந்தாலும் இந்த மாதத்தில் மட்டும் 20 ஆயத்துக்கள் வரும் அளவு சூறாக்களை மனனம் செய்ய வேண்டும்.
2. 5-7 வயது குழந்தைகளுக்கு -- 35 ஆயத்துக்கள் அளாவு சூறா.
3. 7-10 வயது குழந்தைகள் -- 50 ஆயத்துக்கள் அளாவு சூறா.
4. ஒவ்வொரு குழுவிலும் முதல் பரிசு உண்டு.
5. விரைந்து முடித்து, சரளமாக நினைவு கூர்ந்து தஜ்வீதும் சரியாக இருத்தலே முதல் பரிசு பெறும்.


இனி, இன்ஷா அல்லாஹ் இந்த வலைப்பூவில் ரமதான் மாதம் முழுதும் என்னவெல்லாம் பார்க்க / படிக்க / பயன்பெற உதவும்:

1. சூறா முல்க்கின் ஒவ்வொரு ஆயத்தும், அதன் தஜ்வீதும், தஃப்ஸீரும் : : மனனம் செய்வதை எளிதாக்கிட.
2. 40 ஹதீத்துக்களின் தமிழாக்கம், விவரமான குறிப்புகளுடன்.
3. திருக் குர் ஆனில் றப்பனா என்று ஆரம்பிக்கும் 25 து’ஆக்கள், தமிழாக்கம், கேட்டு மகிழ/ மனனம் செய்ய ஒலியுடன்.
4. சத்திய மார்க்கத்தின் ‘தோழர்கள்’ பதிவுகள் மீள்பதிவாக.

என்ன சகோதர சகோதரிகளே... தயார் ஆகிவிட்டீர்களா??? என்னுடைய annublogs@gmail.com என்னும் முகவரிக்கு விரைவில் உங்கள் விருப்பங்களை எழுதுங்கள். நற்கூலிகளை சுமந்து கொண்டு நம்மை நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்கும் ரமதான் மாதத்தினை நாமும் இம்முறை நல்லதொரு திட்டங்களோடு எதிர்கொள்வோம், பயனுடைவோம்... இன்ஷா அல்லாஹ்.... அல்லாஹும்ம பலக்ன ரமதான்.... ஆமீன்... ஆமீன்... அல்லாஹும்ம ஆமீன்.

1 comment: