பக்கங்கள்

September 1, 2010

இன்றைய து'ஆ

நபி (ஸல்) அவர்களின் துணைவி உம்முல் முஃமினீன் ஜுவைரியா(ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி(ஸல்) அவர்கள் சுப்ஹீத் தொழுகைக்குப்பின் அதிகாலையில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நான் எனது தொழுமிடத்தில் அமர்ந்திருந்தேன். பிறகு அவர்கள் முற்பகல் தொழுகை(ளுஹா) தொழுதுவிட்டு வந்தார்கள். அப்போதும் நான் (அதே) இடத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது என்னிடம், "நான் உன்னிடமிருந்து சென்றது முதல் இதே நிலையில்தான் நீ இருந்து கொண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்கள். நான், " ஆம்" என்றேன்.

நபி (ஸல்) அவ்ர்கள், "நான் உன்னிடமிருந்து சென்றதற்குப் பிறகு நான்கு (துதி) சொற்களை மூன்று முறை சொன்னேன். அவற்றை இன்றைக்கெல்லாம் நீ சொன்னவற்றுடன் மதிப்பிட்டால், நீ சொன்னவற்றை அவை மிகைத்துவிடும். (அவை)


"சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, வ ரிதா நஃப்சிஹி, வ ஜீனத்த அர்ஷிஹி, வ மிதாத கலிமாதிஹி"
ஆகியவையாகும் என்றார்கள்.
பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவிற்கும், அவனது அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவிற்கும் அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்து அவனை தூயவன் என துதிக்கிறேன்.
[ சஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் 48 : ஹதீஸ் எண் 5272: அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) ]

ஒலி வடிவில் கேட்க இங்கே கிளிக்கவும். (Real Player Format)




.

No comments:

Post a Comment