அதற்கு, "ஜிப்ரீல் (அலை) அவர்கள், எந்தவொரு அடியான் ரமலானை அடைந்தும் அவனது பாவம் மன்னிக்கப்படவில்லையோ அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும்* என்று கூறினார்கள். அதற்கு நான் ஆமீன் என்றுக் கூறினேன். பிறகு எந்த அடியானிடத்தில் என்னைப் பற்றி சொல்லப்படும் போது அவன் என் மீது ஸலாம் கூறவில்லையோ அவனுடைய மூக்கு மண்ணை கவ்வட்டும்** என்று கூறினார்கள் அதற்கு ஆமீன் என்று கூறினேன். எந்த அடியான் தனது தாய் தந்தையையோ அல்லது இருவரில் ஒருவரையோ பெற்றிருந்தும் சொர்க்கம் செல்லவில்லையோ அவனது மூக்கு மண்ணைக் கவ்வட்டும்*** என்று கூறினார்கள். அதற்கு நான் ஆமீன் என்று கூறினேன்" என்று பதிலளித்தார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா(ர)
நூல் : பைஹகீ (8767)
* ரமதான் மாதத்தையும் பிற மாதத்தைப் போல எண்ணி அதில் அதிகதிகமாக நற்செயல்கள் செய்யாமலும், அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடும் இபாதத்துகளை செய்யாமலே காலம் கடத்தியவனும் ஆவான்.
**நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேரை சொல்லும்பொழுதெல்லாம் மற்றும் கேட்கும் பொழுதெல்லாம், ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் என்று கூறவேண்டியது கடமை. அதை தவற விட்டவன் / அலட்சியம் செய்தவன்.
*** தன்னுடைய தாய் தந்தை வயோதிகர்கள் ஆன பின்னரும் அவர்களை தகுந்த முறையில் கவனிக்காமல், பாதுகாக்காமல், சொல் கேளாமல், மதிக்காமல் விட்டவன்.
.
No comments:
Post a Comment