பக்கங்கள்

August 27, 2010

சிந்தனைக்கு இன்று

அதா'அ(ரஹி) அவர்கள் கூறினார்கள். ஓர் இளைஞன் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் வீட்டிற்கு போவதையும் அவர்களிடம் நிறைய சந்தேகம் கேட்பதுமாக இருந்தான். அன்னை ஆயிஷா(ரலி) அவர்களும் அவனுக்கு கற்பித்துக் கொண்டிருந்தார்கள். ஓர் நாள் எப்பொழுதும் போல அவ்விளைஞன் அன்னையிடம் சென்று சில சந்தேகங்களை கேட்டான், அதற்கு அன்னையவர்களோ,"மகனே இதுவரை நீ என்னிடம் கற்றதை செயலில் சேர்த்துவிட்டாயா (கற்ற அறிவை அமல்களில் கொண்டு வ‌ந்தாயா)?" என்று கேட்டனர். அதற்கு அந்த இளைஞன், "இல்லை அம்மா...நான் இன்னும் அதன் மேல் அமல் செய்யவில்லை" என்று கூறினார். அதனைக் கேட்ட ஆயிஷா(ரலி) அன்னையவர்கள், "மகனே பின், எனக்கும் உனக்கும் எதிராய் அல்லாஹ்வினிடத்தில் சாட்சி தயாரிக்க ஏன் விரும்புகிறாய்?" என்றனர்.


அல் கதீப் அல் பாக்தாதியினுடைய இக்திதா அல் இல்ம் அல் அமால் என்னும் புத்தகத்தில் பக்கம் 92

சிந்திக்க: கற்றது கடுகளவே ஆயினும் அதனை அமல் செய்யாமல் அடுத்தடுத்து ஞானத்தை வளர்க்கப் பார்ப்பது அல்லாஹ்வினிடத்தில் நமக்கெதிரான சாட்சியாய் அமைந்துவிடும்!!



.

No comments:

Post a Comment